Wednesday, August 30, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

குடித்து மிச்சமிருந்து
புளித்துத் திரண்டிருந்த
அரைக் கோப்பை பால்
பாவித்தும் தூக்கியெறியப்படாத
நொய்ந்த ஆணுறை
படித்தும் படிக்காததுமாய்
பரப்பிக் கிடந்த பத்திரிகைகள்
உடைத்த பிஸ்கட் பக்கட்டுக்கள், சப்பாத சுவிங்கங்கள்
புதிதாய் பின்னப்பட்டிருந்த சிலந்தி வலைகள்
தண்ணீர் காணாத
ஒற்றை ரோஜா செடி - என்பனவாய்
வயதிற்கு வந்த நாள் முதல்
நான் சேமித்த பொறுமைகளை சோதிக்க
வீடு முழுக்க இறைந்து கிடந்தன
உன் ஆண்மையும் அகங்காரங்களும்
என் நோய்வாய்ப்பட்ட ஒரு வாரத்தில்.
பறவைகளுக்குத் தான் சிறகுகள்
வேலைக்கார பெண்டாட்டிகளுக்கு ஏது அவை?
ஆனாலும் - இன்னும் இருக்கிறது ஆகாயம்
விரிந்து பரந்து என் ஆகாயம் மட்டும்.

2 Comments:

Anonymous Anonymous said...

Hi Mathu,

Saw ur blog frm some friends lnks....

Diffrent and tuchable padaipukal...

But couldnt c updates...

"paranthu irukkum aakaayam"....paranth pathivukalai ethirpaarrkku

Nirmalan
nimi0601@yahoo.com

1:36 AM  
Blogger கானா பிரபா said...

கவிதைகள் அருமை, தொடர்ந்தும் படித்துவருகிறேன்

7:05 PM  

Post a Comment

<< Home