Tuesday, August 08, 2006

Poem: உதடுகள் பிரியாமல்....

பிரியமாய் பிரிந்த
உதடுகளுக்கு
உன்னுடன் பேசிக்கொள்ள
மட்டுமே முடிந்தது
முத்தமிடும்
கற்பனைகளை
களைந்த வண்ணம்....


பிரியாமல் அவை
சிலநேரங்களில்...
உன்னுடன் பேசுவதற்கு
மொழி இல்லாமலும்
முத்தமிடுவதற்கு
திறன் இல்லாமலும்....

பிரிந்தும் பிரியாமலும்
பலநேரங்களில்
என் உதடுகள்...
உன் கதைகளின்
வண்ணங்களை கேட்டவண்ணமே
முத்ததிற்கான ஆயத்தங்களுடன்...

ஆனாலும்...
என்று பிரியும்
என் உதடுகள்
என காத்திருக்கிறேன்
முத்ததிற்கான
நாள்நோக்கி...

அதுவரை..
எச்சில் முழுங்கி
தணித்துக்கொள்கிறேன்
என் முத்ததின்
தாகத்தையும்..
இது வரை
சொல்லாத
என் காதலின்
வார்த்தைகளையும்....

0 Comments:

Post a Comment

<< Home